search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவ"

    • மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அனைவரும் மலேரியா நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவுபடி, துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சவுந்தரராஜன் ஆகியோர் ஜெயராம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கொசுக்கள் எப்படி உருவாகின்றன என்றும், அவற்றின் வாழ்க்கை சுழற்சி முறை, கொசுக்கள் எவ்வாறு நோய் பரப்பிகளாக செயல்படுகின்றன என்றும்,

    அவைகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு வீட்டிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துதல்,

    தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒரு முறை தேய்த்து கழுவி சுத்தம் செய்து தண்ணீர் சேமித்து வைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மலேரியா மற்றும் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களான தேங்காய் சிரட்டைகள், உடைந்த பானைகள்,பழைய டயர்கள், உடைந்த டப்பாக்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டது.

    கொசு புழுக்களையும் பாட்டிலில் அடைத்து வைத்து பள்ளி மாணவர்களும் காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பின்னர் அனைவரும் மலேரியா நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர். இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் நகராட்சி அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    ×